8.  நல்லது நாயகனுக்கு

அல் அமரும் குழலாளை வரகுண பாண்டிய ராசர்
   அன்பால் ஈந்தார்!
கல்லைதனில் மென்று உமிழ்ந்த ஊன்அமுதைக்
   கண்ணப்பர் கனிவால் ஈந்தார்!
சொல்லிய தண்டலையார்க்குக் கீரையும் மாவடுவும்
   ஒரு தொண்டர் ஈந்தார்!
நல்லது கண்டால் பெரியோர் நாயகனுக்கு
   என்று அதனை நல்கு வாரே.
உரை