80. பொல்லாத
கள்ளர்
செழுங்கள்ளி நிறைசோலைத் தண்டலைநீள்
நெறியாரே! திருடிக் கொண்டே
எழும் கள்ளர் நல்லகள்ளர்! பொல்லாத
கள்ளர் இனி யாரோ என்றால்,
கொழுங்கள்ளர் தம்முடன் கும்பிடும் கள்ளர்
திருநீறு குழைக்கும் கள்ளர்
அழும் கள்ளர் தொழும் கள்ளர் ஆசாரக்
கள்ளர் இவர் ஐவர் தாமே.
|