81.   மனத்திலே பகை ஆகி ...

தனத்திலே மிகுத்த செழுந் தண்டலையார்
   பொன்னி வளம் தழைத்த நாட்டில்,
இனத்திலே மிகும் பெரியோர் வாக்கு மனம்
   ஒன்று ஆகி எல்லாம் செய்வார்;
சினத்திலே மிகும் சிறியோர் காரியமோ
   சொல்வது ஒன்று! செய்வது ஒன்று!
மனத்திலே பகை ஆகி உதட்டிலே
   உறவாகி மடிவர் தாமே.

உரை