84. நெருப்பினைச்
சிறிது என்று முன்றானையில் ...
அருப்பயிலும் தண்டலைவாழ் சிவனடியார்
எக்குலத்தார் ஆனால் என்ன?
உருப் பயிலும் திருநீறும் சாதனமும்
கண்டவுடன் உகந்து போற்றி,
இருப்பதுவே முறைமை அல்லால் ஏழை என்றும்
சிறியர் என்றும் இகழ்ந்து கூறின்
நெருப்பினையே சிறிது என்று முன்றானை
தனில் முடிய நினைந்தவாறே.
|