86. கையிலே
புண் இருக்கக் கண்ணாடி
பார்ப்பது என்ன?
மையிலே தோய்ந்த விழி வஞ்சியரைச்
சேர்ந்தவர்க்கு மறுமை இல்லை!
மெய்யிலே பிணியும் உண்டாம்! கைப்பொருளும்
கேடு ஆகி விழலர் ஆவார்!
செய்யிலே வளம் தழைத்த தண்டலையார்
வள நாட்டில் தெளிந்தது அன்றோ?
கையிலே புண்இருக்கக் கண்ணாடி
பார்ப்பது என்ன கருமம் தானே?
|