87. பனை
அடியிலே பால் குடித்தால்?
காலம் அறி தண்டலையார் வள நாட்டில்
கொலை களவு கள்ளே காமம்
சாலவரும் குரு நிந்தை செய்பவர்பால்
மேவி அறம்தனைச் செய்தற்கும்
சீலம் உடையோர் நினையார்! பனை அடியிலே
இருந்து தெளிந்த ஆவின்
பாலினையே குடித்தாலும் கள் என்பார்!
தள் என்பார்! பள் என்பாரே.
|