88.      பொல்லாச் சூது

கைக்கு எட்டாது ஒரு பொருளும்! கண்டவர்க்கு
   நகை ஆகும்! கனமே! இல்லை!
இக்கட்டாம் வருவது எல்லாம்! லாபம் உண்டோ?
   கவறு கையில் எடுக்கலாமோ?
திக்கு எட்டு ஏறிய கீர்த்தித் தண்டலையார்
   வள நாட்டில் சீச்சீ என்னச்
சொக்கட்டான் எடுத்தவர்க்குச் சொக்கட்டான்
   சூது பொல்லாச் சூது தானே.

உரை