90. அரைக் காசுக்குப் போன அபிமானம் ...

கான் அமரும் கவரி ஒரு மயிர்படினும்
   இறக்கும்! அது கழுதைக்கு உண்டோ?
மானமுடன் வாழ்பவனே மாபுருடன்!
   சுயோதனனை மறந்தார் உண்டோ?
ஆனகம் சேர் ஒலிமுழங்கும் தண்டலையாரே!
   சொன்னேன்! அரைக் காசுக்குப்
போன அபிமானம் இனி ஆயிரம் பொன்
   கொடுத்தாலும் பொருந்திடாதே.

உரை