92.   ‘நிறை குடமோ தளும்பாது'

பொறுமையுடன் அறிவு உடையார் இருந்த இடம்
   விளக்கு ஏற்றிப் புகுத வேண்டும்!
கெறுவமுடன் அகந்தை உள்ளார் இறுமாந்து
   நடந்து தலைகீழாய் வீழ்வார்!
வறுமையினும் மறுமையினும் காணலாம்
   தண்டலையார் வாழும் நாட்டில்
நிறை குடமோ தளும்பாது! குறை குடமே
   கூத்தாடி நிற்பதாமே!

உரை