93. ஆலமரம்
பழுத்தவுடன் ...
ஞாலம்உறு நல்லவர்க்குச் செல்வம் வந்தால்
எல்லவர்க்கும் நாவலோர்க்கும்
காலம்அறிந்து அருமையுடன் பெருமை அறிந்து
உதவிசெய்து கனமே செய்வார்;
மால் அறியாத் தண்டலைநீள் நெறியாரே!
அவர் இடத்தே வருவார் யாரும்!
ஆலமரம் பழுத்தவுடன் பறவையின்பால்
சீட்டு எவரே அனுப்புவாரே?
|