94. நாணம்
அற்றார் நிலை
சேண் இலகு மதிச் சடையார் தண்டலையார்
வள நாட்டி சிறந்த பூணின்
காணவரும் நாண் உடையார் கனம் உடையார்
அல்லாதார் கருமம் எல்லாம்
ஆண் அவலம்! பெண் அவலம்! ஆடிய கூத்து
அவலம்! என அலைந்து கேடாம்!
நாணம் இல்லாக் கூத்தியர்க்கு நாலு திக்கும்
வாயில் எனும் நடத்தை ஆமே.
|