95. பிடாரிதனைப்
பெண்டு
வைத்துக்கொண்டது
அடுத்த மனைதொறும் புகுவாள்! கணவன் உணும்
முனம் உண்பாள்! அடக்கம் இல்லாள்!
கடுத்த மொழி பேசிடுவாள்! சிறுதனம்
தேடுவள்! இவளைக் கலந்து வாழ்தல்
எடுத்த விடைக் கொடியாரே! தண்டலையாரே!
எவர்க்கும் இன்பம் ஆமோ?
குடித்தனமே கெட வேண்டிப் பிடாரிதனைப்
பெண்டு வைத்துக் கொண்டது ஆமே.
|