98.  நாழி நெல்லுக்கு ஒரு புடைவை

ஆழி எல்லாம் பால் ஆகி அவனி எல்லாம்
   அன்ன மயம் ஆனால் என்ன?
சூழ வரும் இரவலர்க்குப் பசி தீர
   உண்டு இருக்கும் சுகம் தான் உண்டோ!
ஏழ் உலகும் பணிய வரும் தண்டலையாரே!
   சொன்னேன்! எந்த நாளும்
நாழி நெல்லுக்கு ஒரு புடைவை விற்றாலும்
   நிருவாணம் நாய்க்குத் தானே.

உரை