99. அச்சியிலே
போனாலும் ...
கொச்சையிலே பாலும் உண்டோ? கூத்தியர்கள்
தம்மிடத்தில் குணம்தான் உண்டோ?
துச்சரிடத்து அறிவு உண்டோ? துச்சர் எங்கே
போனாலும் துரை ஆவாரோ?
நச்சு அரவத் தொடையாரே! தண்டலையாரே!
இந்த நாடு அல்லாமல்
அச்சியிலே போனாலும் அகப்பை அரைக்
காசு அதன்மேல் ஆர் கொள்வாரே?
|