28.    குளிர் காய நேரம் இல்லை!

உரு எடுத்த நாள்முதலா ஒருசாணும்
   வளர்க்க உடல் உழல்வது அல்லால்
மரு இருக்கும் நின்பாத மலர்தேடித்
   தினம் பணிய மாட்டேன்! அந்தோ!
திரு இருக்கும் மணி மாடத் தண்டலைநீள்
   நெறியே! என் செய்தி எல்லாம்
சருகு அரிக்க நேரம் அன்றிக் குளிர்காய
   நேரம் இல்லாத் தன்மை தானே!
உரை