97.    பிறர் வருத்தம் அறியார்

நொந்தவரும் பசித்தவரும் விருந்தினரும்
   விரகினரும் நோய் உள்ளோரும்
தந்தமது வருத்தம் அல்லால் பிறர் உடைய
   வருத்தம் அது சற்றும் எண்ணார்!
இந்து உலவும் சடையாரே! தண்டலையாரே!
   சொன்னேன் ஈன்ற தாயின்
அந்த முலைக் குத்து வலி சவலை மகவோ
   சிறிதும் அறிந்திடாதே.

உரை