1. உயர் பிறப்பு

கடல் உலகில் வாழும் உயிர் எழுபிறப்பின் உள்மிக்க
     காட்சிபெறு நர சன்மமாய்க்
  கருதப் பிறத்தல் அரிது அதினும்உயர் சாதியில்
     கற்புவழி வருதல் அரிது;
வடிவமுடன் அவயவம் குறையாது பிழையாது
     வருதல் அதுதனினும் அரிது;
  வந்தாலும் இது புண்யம் இதுபாவம் என்று எண்ணி
     மாசில்வழி நிற்றல் அரிது;
நெடிய தனவான் ஆதல் அரிது அதில் இரக்கம்உள
     நெஞ்சினோன் ஆதல் அரிது;
  நேசமுடன் உன்பதத்து அன்பனாய் வருதல்இந்
     நீள்நிலத்து அதினும் அரிதாம்;
அடியவர்க்கு அமுதமே! மோழை பூபதி பெற்ற
     அதிபன் எமது அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை