11. தகாத
சேர்க்கை
பூத தயை
இல்லாத லோபியர் இடத்திலே
பொருளை அருளிச் செய்தனை!
புண்ணியம் செய்கின்ற சற்சனர் இடத்திலே
பொல்லாத மிடி வைத்தனை!
நீதி அகல் மூடர்க்கு அருந்ததி எனத்தக்க
நெறி மாதரைத் தந்தனை!
நிதானம் உள உத்தமர்க்கு இங்கிதம் இலாத கொடு
நீலியைச் சோவித்தனை!
சாதியில் உயர்ந்த பேர் ஈனர் பின்னே சென்று
தாழ்ந்து பரவச் செய்தனை!
தமிழ் அருமை அறியாத புல்லர் மேல் கவிவாணர்
தாம் பாடவே செய்தனை!
ஆதரவு இலாமல் இப்படி செய்தது என் சொலாய்?
அமல! எமது அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|