12. பதர்

மாறாத கலைகற்றும் நிலைபெற்ற சபையிலே
     வாயிலாதவன் ஒரு பதர்;
  வாள்பிடித்து எதிரிவரின் ஓடிப் பதுங்கிடும்
     மனக்கோழை தான் ஒரு பதர்;
ஏறா வழக்கு உரைத்து அனைவரும் சீசிஎன்று
     இகழ நிற்பான் ஒரு பதர்;
  இல்லாள் புறம் செலச் சம்மதித்து அவளோடு
     இணங்கி வாழ்பவன் ஒரு பதர்;
வேறு ஒருவர் மெச்சாது தன்னையே தான் மெச்சி
     வீண்பேசுவான் ஒரு பதர்;
  வேசையர்கள் ஆசைகொண்டு உள்ளளவும் மனையாளை
     விட்டு விடுவான் ஒரு பதர்;
ஆறாத துயரையும் மிடியையும் தீர்த்து அருள்செய்
     அமல! எமது அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை