13. செய்ய வேண்டும்

வாலிபம் தனில்வித்தை கற்க வேண்டும்;கற்ற
     வழியிலே நிற்க வேண்டும்;
  வளைகடல் திரிந்து பொருள் தேடவேண்டும்;தேடி
     வளர் அறம் செய்ய வேண்டும்;
சீலம் உடையோர்களைச் சேரவேண்டும்;பிரிதல்
     செய்யாது இருக்க வேண்டும்
  செந்தமிழ்ப் பாடல்பல கொள்ளவேண்டும்;கொண்டு
     தியாகம் கொடுக்க வேண்டும்;
ஞாலமிசை பலதருமம் நாட்டவேண்டும்;நாட்டி
     நன்றாய் நடத்த வேண்டும்;
  நம்பன் இணை அடி பூசை பண்ணவேண்டும்;பண்ணி
     னாலும் மிகு பத்தி வேண்டும்
ஆலம் அமர் கண்டனே! பூதி அணி முண்டனே!
     அனக! எமது அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை