14. மேன்மேல் உயர்ச்சி

தன்மட்டில் இரவாது சீவனம் செய்பவன்
     சாமர்த்தியம் உள புருடன் ஆம்
  சந்ததம் பதின்மரைக் காப்பாற்றுவோன் மிக்க
     தரணி புகழ் தருதேவன் ஆம்.
பொன் மட்டிலாமல் ஈந்து ஒரு நூறு பேரைப்
     புரப்பவன் பொருஇல் இந்த்ரன்,
  புவிமீதில் ஆயிரம் பேர்தமைக் காப்பாற்று
     புண்யவானே பிரமன் ஆம்
நன்மைதரு பதினாயிரம் பேர் தமைக்காத்து
     ரட்சிப்பவன் செங்கண்மால்,
  நாளும் இவன் மேல் அதிகமாக வெகுபேர்க்கு உதவு
     நரனே மகாதேவன் ஆம்,
அல் மட்டுவார் குழலி பாகனே! ஏகனே!
     அண்ணல்எமது அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை