16.
நல்லோர் - 1
செய்ந்நன்றி
மறவாத பேர்களும், ஒருவர் செய்
தீமையை மறந்த பேரும்,
திரவியம் தரவரினும் ஒருவர் மனையாட்டிமேல்
சித்தம் வையாத பேரும்,
கை கண்டு எடுத்த பொருள் கொண்டு போய்ப் பொருளாளர்
கையில் கொடுத்த பேரும்,
காசினியில் ஒருவர் செய் தருமம் கெடாதபடி
காத்தருள் செய்கின்ற பேரும்,
பொய் ஒன்று நிதிகோடி வரினும் வழக்கு அழிவு
புகலாத நிலைகொள் பேரும்.
புவிமீது தலைபோகும் என்னினும் கனவிலும்
பொய்ம்மை உரையாத பேரும்,
ஐய இங்கு இவர் எலாம் சற்புருடர் என்று உலகர்
அக மகிழ்வர்! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|