17. நல்லோர் - 2

அடைக்கலம் எனத்தேடி வருவோர் தமைக்காக்கும்
     அவனே மகா புருடனாம்;
  அஞ்சாமல் எதுவரினும் எதுபோகினும் சித்தம்
     அசைவு இலன் மகா தீரனாம்;
தொடுத்து ஒன்று சொன்னசொல் தப்பாது செய்கின்ற
     தோன்றலே மகராசனாம்;
  தூறிக் கலைக்கின்ற பேர்வார்த்தை கேளாத
     துரையே மகா மேருவாம்!
அடுக்கின்ற பேர்க்குவரும் இடர்தீர்த்து இரட்சிக்கும்
     அவனே மகா தியாகியாம்;
  அவரவர் தராதரம் அறிந்து மரியாதை செயும்
     அவனே மகா உசிதன்ஆம்;
அடர்க்கின்ற முத்தலைச் சூலனே! லோலனே!
     அமலனே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை