18.
இல்லை
காமிக்கு முறை
இல்லை; வேசைக்கு நாண் இல்லை;
கயவர்க்கு மேன்மை இல்லை;
கன்னம் இடு கள்வருக்கு இருளில்லை; விபசார
கன்னியர்க்கு ஆணை இல்லை;
தாம் எனும் மயக்கறுத்து ஓங்கு பெரியோர்க்கு வரு
சாதி குலம் என்பதில்லை;
தாட்சணியம் உடைய பேர்க்கு இகலில்லை; எங்கும் ஒரு
சார்பிலார்க்கு இடமது இல்லை;
பூமிக்குள் ஈயாத லோபர்க்கு வளமான
புகழென்பது ஒன்றும் இல்லை;
புலையர்க்கு நிசமில்லை; கைப்பொருள் இலாததோர்
புருடருக்கு ஒன்றும் இல்லை;
யாமினி தனக்கு நிகர் கந்தரத்து இறைவனே
அன்புடைய அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|