18. இல்லை

காமிக்கு முறை இல்லை; வேசைக்கு நாண் இல்லை;
     கயவர்க்கு மேன்மை இல்லை;
  கன்னம் இடு கள்வருக்கு இருளில்லை; விபசார
     கன்னியர்க்கு ஆணை இல்லை;
தாம் எனும் மயக்கறுத்து ஓங்கு பெரியோர்க்கு வரு
     சாதி குலம் என்பதில்லை;
  தாட்சணியம் உடைய பேர்க்கு இகலில்லை; எங்கும் ஒரு
     சார்பிலார்க்கு இடமது இல்லை;
பூமிக்குள் ஈயாத லோபர்க்கு வளமான
     புகழென்பது ஒன்றும் இல்லை;
  புலையர்க்கு நிசமில்லை; கைப்பொருள் இலாததோர்
     புருடருக்கு ஒன்றும் இல்லை;
யாமினி தனக்கு நிகர் கந்தரத்து இறைவனே
     அன்புடைய அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை