19.
நிலையாமை
காயம் ஒரு புற்புதம்!
வாழ்வு மலை சூழ்தரும்
காட்டில் ஆற் றின் பெருக்காம்!
கருணை தரு புதல்வர் கிளை மனை மனைவி இவை எலாம்
கானல் காட்டும் ப்ரவாகம்!
மேய புய பலவலிமை இளமை அழகு இவை எலாம்
வெயில் மஞ்சள்! உயிர் தானுமே,
வெட்ட வெளி தனில் வைத்த தீபம் எனவே கருதி,
வீண் பொழுது போக்காமலே
நேய முடனே தெளிந்து அன்பொடு உன் பாதத்தில்
நினைவு வைத்திரு போதினும்
நீர்கொண்டு மலர்கொண்டு பரிவு கொண்டு அர்ச்சிக்க
நிமலனே! அருள் புரிகுவாய்
ஆயும் அறிவாளர் பணி பாதனே! போதனே!
அண்ணல் எமது அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|