2. இல்லாளின் சிறப்பு

கணவனுக்கு இனியளாய், ம்ருதுபாஷியாய், மிக்க
      கமலைநிகர் ரூபவதியாய்க்,
  காய்சினம் இலாளுமாய், நோய்பழி இலாத ஓர்
      கால்வழியில் வந்தவளுமாய்,
மணமிக்க நாணம் மடம் அச்சம் பயிர்ப்பு என்ன
      வரும் இனிய மார்க்கவதியாய்,
  மாமிமாமற்கு இதம் செய்பவளுமாய், வாசல்
      வரு விருந்து ஓம்புபவளாய்,
இணைஇல் மகிழ்நன் சொல்வழி நிற்பவளுமாய்வந்தி
      என் பெயர் இலாதவளுமாய்,
  இரதி எனவே லீலை புரிபவளுமாய்ப் பிறர்தம்
      இல்வழி செலாதவளுமாய்,
அணியிழை ஒருத்தி உண்டாயின் அவள் கற்புடையள்
     ஆகும்;எமது அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை