20. திருமகள் இருப்பிடம்

நற்பரி முகத்திலே, மன்னவர் இடத்திலே,
     நாகரிகர் மாமனையிலே,
  நளின மலர் தன்னிலே, கூவிளந் தருவிலே,
     நறை கொண்ட பைந்துளவிலே,
கற்புடையர் வடிவிலே, கடலிலே, கொடியிலே,
     கல்யாண வாயில் தனிலே,
  கடிநகர் இடத்திலே, நற் செந்நெல் விளைவிலே,
     கதிபெறு விளக்கு அதனிலே,
பொற்புடைய சங்கிலே, மிக்கோர்கள் வாக்கிலே
     பொய்யாத பேர் பாலிலே,
  பூந்தடந் தன்னிலே, பாற்குடத்து இடையிலே
     போதகத்தின் சிரசிலே
அற்பெருங் கோதைமலர் மங்கைவாழ் இடமென்பர்
     அண்ணல் எமது அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை