21. மூதேவி இருப்பிடம்

மிதம் இன்றி அன்னம் புசிப்போர் இடத்திலும்,
     மிகுபாடையோர் இடத்தும்,
  மெய் ஒன்றிலாமலே பொய் பேசியே திரியும்
     மிக்க பாதகரிடத்தும்,
கதி ஒன்றும் இலர் போல மலினம் கொளும் பழைய
     கந்தை அணிவோர் இடத்தும்
  கடிநாய் எனச் சீறி எவரையும் சேர்க்காத
     கன்னி வாழ் மனைஅகத்தும்,
ததிசேர் கடத்திலும், கர்த்தபத்து இடையிலும்,
     சார்ந்த ஆட்டின் திரளிலும்
  சாம்பிணம் முகத்திலும் இவை எலாம் கவலை புரி
     தவ்வை வாழ் இடம் என்பர் காண்!
அதிரூப மலை மங்கை நேசனே! மோழைதரும்
     அழகன் எமது அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை