22. இருநிலையிலும் பயனற்றவை

குணம் அற்ற பேய் முருங்கைத் தழை தழைத்து என்ன?
     குட்டநோய் கொண்டும் என்ன?
  குரைக்கின்ற நாய்மடி சுரந்து என்ன ? சுரவாது
     கொஞ்சமாய்ப் போகில் என்ன?
மணம் அற்ற செம்முருக்கது பூத்து அலர்ந்து என்ன?
     மலராது போகில் என்ன?
  மதுரம் இல்லா உவர்க் கடல் நீர் கறுத்து என்ன?
     மாவெண்மை ஆகில் என்ன?
உணவற்ற பேய்ச்சுரை படர்ந்தென்ன? படராது
     உலர்ந்து தான் போகில் என்ன?
  உதவாத பேர்க்கு வெகு வாழ்வு வந்தால் என்ன?
     ஓங்கும் மிடிவரில் என்ன காண்?
அணியுற்ற பைங்கொன்றை மாலிகா பரணனே!
     ஆதியே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை