23. குறைந்தாலும் பயன்படல்

தறிபட்ட சந்தனக் கட்டை பழுது ஆயினும்
     சார் மணம் பழுது ஆகுமோ!
  தக்க பால் சுவறிடக் காய்ச்சினும் அது கொண்டு
     சார்மதுரம் குறையுமோ?
நிறைபட்ட கதிர்மணி அழுக்கு அடைந்தாலும் அதின்
     நீள்குணம் மழுங்கி விடுமோ?
  நெருப்பிடை உருக்கினும் அடுக்கினும் தங்கத்தின்
     நிறையும் மாற்றுக் குறையுமோ?
கறை பட்ட பைம்புயல் மறைத்தாலும் அது கொண்டு
     கதிர் மதி கனம் போகுமோ?
  கற்ற பெரியோர் மகிமை அற்பர் அறிகிலரேனும்
     காசினி தனிற் போகுமோ?
அறிவுற்ற பேரை விட்டு அகலாத மூர்த்தியே!
     ஐயனே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை