25. இதனை
இதுகண்டு மகிழும்
தந்தை தாய் மலர் முகம் கண்டு நின்று ஆலிப்பது
அவர் தந்த சந்ததியது ஆம்!
சந்த்ரோதயம் கண்டு பூரிப்பது உயர்வாவி
தங்கு பைங்குமுத மலர் ஆம்!
புந்தி மகிழ் வாய்இரவி வருதல்கண்டு அக மகிழ்வ
பொங்கு தாமரை மலர்கள் ஆம்!
போதவும் புயல்கண்டு கண்களித்தே நடம்
புரிவது மயூர இனம் ஆம்!
சிந்தை மகிழ்வாய் உதவு தாதா வினைக் கண்டு
சீர் பெறுவது இரவலர் குழாம்
திகழ் நீதி மன்னரைக் கண்டு களி கூர்வது இச்
செகம் எலாம் என்பர் கண்டாய்!
அந்தி அம் வான் அனைய செம் சடாடவியனே!
அமலனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|