26. ஆகாதவை

உள்ளன்பு இலாதவர் தித்திக்கவே பேசி
     உறவாடும் உறவும் உறவோ?
  உபசரித்து அன்புடன் பரிமாறிடாத
     சோறு உண்டவர்க்கு கன்னம் ஆமோ?
தள்ளாது இருந்து கொண்டு ஒருவர் போய்ப் பார்த்து வரு
     தக்க பயிர் பயிர் ஆகுமோ?
  தளகர்த்தன் ஒருவன் இல்லாமல் முன் சென்றிடும்
     தானையும் தானை யாமோ?
விள்ளாத போகம் இல்லாத பெண் மேல்வரு
     விருப்பமும் விருப்ப மாமோ?
  வெகுகடன் பட்டபேர் செய்கின்ற சீவனமும்
     மிக்க சீவனம் ஆகுமோ?
அள்ளாது இருங்கருணையாளனே! தேவர் தொழும்
     ஆதியே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை