27. நற்பண்புக்கு
இடம் இலார்
வெறி
கொண்ட மற்கடம் பேய் கொண்டு, கள் உண்டு
வெம் கரஞ்சொறிப் புதரில்
வீழ்ந்து, தேள் கொட்டிடச் சன்மார்க்கம் எள்ளளவும்
மேவுமோ? மேவாது போல்,
குறைகின்ற புத்தியாய், அதில் அற்ப சாதியாய்க்,
கூடவே இளமை உண்டாய்க்,
கொஞ்சமாம் அதிகாரமும் கிடைத்தால் மிக்க
குவலயந்தனில் அவர்க்கு,
நிறைகின்ற பத்தியும் சீலமும் மேன்மையும்
நிதானமும் பெரியோர்கள் மேல்
நேசமும் ஈகையும் இவை எலாம் கனவிலும்
நினைவிலும் வராது கண்டாய்;
அறைகின்ற சுருதியின் பொருளான வள்ளலே!
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|