28. இவர் இன்ன முறையர்

தன்னால் முடிக்க ஒண்ணாத காரியம் வந்து
     தான் முடிப்போன் தமையன் ஆம்;
  தன் தலைக்கு இடர் வந்த போது மீட்டு உதவுவோன்
     தாய் தந்தை என்னல் ஆகும்;
ஒன்னார் செயும் கொடுமையால் மெலிவு வந்த போது
     உதவுவோன் இட்ட தெய்வம்;
  உத்தி புத்திகள் சொல்லி மேல் வரும் காரியம்
     உரைப்பவன் குரு என்னல் ஆம்;
எந்நாளும் வரும் நன்மை தீமை தனது என்னவே
     எண்ணி வருவோன் பந்து ஆம்;
  இருதயம் அறிந்து தன் சொற்படி நடக்கும் அவன்
     எவன் எனினும் அவனே சுதன்
அம் நாரமும் பணியும் எந்நாளுமே புனையும்
     அண்ணலே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை