28.
இவர் இன்ன முறையர்
தன்னால் முடிக்க
ஒண்ணாத காரியம் வந்து
தான் முடிப்போன் தமையன் ஆம்;
தன் தலைக்கு இடர் வந்த போது மீட்டு உதவுவோன்
தாய் தந்தை என்னல் ஆகும்;
ஒன்னார் செயும் கொடுமையால் மெலிவு வந்த போது
உதவுவோன் இட்ட தெய்வம்;
உத்தி புத்திகள் சொல்லி மேல் வரும் காரியம்
உரைப்பவன் குரு என்னல் ஆம்;
எந்நாளும் வரும் நன்மை தீமை தனது என்னவே
எண்ணி வருவோன் பந்து ஆம்;
இருதயம் அறிந்து தன் சொற்படி நடக்கும் அவன்
எவன் எனினும் அவனே சுதன்
அம் நாரமும் பணியும் எந்நாளுமே புனையும்
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|