29.
ஒழுகும் முறை
மாதா பிதாவினுக்கு
உள்ளன்புடன் கனிவு
மாறாத நல்லொழுக்கம்;
மருவு குரு ஆனவர்க்கு இனிய உபசாரம் உள
வார்த்தை வழி பாடு அடக்கம்;
காது ஆர் கருங்கண் மனையாள் தனக்கோ சயன
காலத்தில் நய பாடணம்;
கற்ற பெரியோர் முதியர் வரும் ஆதுலர்க்கு எலாம்
கருணை சேர் அருள் விதானம்;
நீதி பெறும் மன்னவர் இடத்து அதிக பய வினயம்;
நெறியுடைய பேர்க்கு இங்கிதம்;
நேயம் உள தமர் தமக்கு அகம் மகிழ்வுடன் பரிவு
நேரலர் இடத்தில் வைரம்
ஆதி மனுநூல் சொலும் வழக்கம் இது ஆகும் எமது
ஐயனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|