3. நன்மக்கட் பேறு

தம் குலம் விளங்கிடப் பெரியோர்கள் செய்துவரு
     தருமங்கள் செய்து வரலும்,
  தன்மம் மிகு தானங்கள் செய்தலும், கனயோக
     சாதகன் எனப்படுதலும்,
மங்குதல் இலாத தன் தந்தை தாய் குருமொழி
     மறாது வழிபாடு செயலும்,
  வழிவழி வரும் தமது தேவதா பத்திபுரி
     மார்க்கமும், தீர்க்க ஆயுளும்,
இங்கித குணங்களும், வித்தையும், புத்தியும்,
     ஈகையும், சன்மார்க்கமும்
  இவையெலாம் உடையவன் புதல்வனாம்; அவனையே
     ஈன்றவன் புண்யவானாம்;
அங்கச விரோதியே! சோதியே! நீதிசேர்
     அரசன் எமது அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை