30. குணத்தைவிட்டுக் குற்றத்தை ஏற்றல்

துட்ட விகடக் கவியை யாருமே மெச்சுவர்;
     சொல்லும் நற் கவியை மெச்சார்
  துர்ச்சனர்க்கு அகம் மகிழ்ந்து உபசரிப்பார் வரும்
     தூயரைத் தள்ளி விடுவார்
இட்டம் உள தெய்வம் தனைக் கருதிடார்; கறுப்பு
     என்னிலோ போய்ப் பணிகுவார்;
  ஈன்ற தாய் தந்தையைச் சற்றும் மதியார்; வேசை
     என்னிலோ காலில் வீழ்வார்;
நட்ட லாபங்களுக்கு உள்ளான பந்து வரின்
     நன்றாகவே பேசிடார்;
  நாளும் ஒப்பாரியாய் வந்த புது உறவுக்கு
     நன்மை பலவே செய்குவார்;
அட்டதிசை சூழ் புவியில் ஓங்கு கலி மகிமை காண்!
     அத்தனே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை