31.
குணம் காணும் குறி
கற்றோர்கள்
என்பதைச் சீலமுடனே சொலும்
கனவாக்கினால் காணலாம்;
கற்பு உளார் என்பதைப் பார்க்கின்ற பார்வையொடு
கால்நடையினும் காணலாம்;
அற்றோர்கள் என்பதை ஒன்றினும் வாரா
அடக்கத்தினால் அறியலாம்;
அறம் உளோர் என்பதைப் பூததயை என்னும் நிலை
அது கண்டு தான் அறியலாம்;
வித்து ஓங்கு பயிரைக் கிளைத்து வரு துடியினால்
விளையும் என்றே அறியலாம்;
வீரம் உடையோர் என்பது ஓங்கி வரு தைரிய
விசேடத்தினால் அறியலாம்;
அத்தா! குணத்தினாற் குலநலம் தெரியலாம்
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|