31. குணம் காணும் குறி

கற்றோர்கள் என்பதைச் சீலமுடனே சொலும்
     கனவாக்கினால் காணலாம்;
  கற்பு உளார் என்பதைப் பார்க்கின்ற பார்வையொடு
     கால்நடையினும் காணலாம்;
அற்றோர்கள் என்பதை ஒன்றினும் வாரா
     அடக்கத்தினால் அறியலாம்;
  அறம் உளோர் என்பதைப் பூததயை என்னும் நிலை
     அது கண்டு தான் அறியலாம்;
வித்து ஓங்கு பயிரைக் கிளைத்து வரு துடியினால்
     விளையும் என்றே அறியலாம்;
  வீரம் உடையோர் என்பது ஓங்கி வரு தைரிய
     விசேடத்தினால் அறியலாம்;
அத்தா! குணத்தினாற் குலநலம் தெரியலாம்
     அண்ணலே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை