33. வெற்றி இடம்

கலைவலாருக்கு அதிக சயம் மதுரவாக்கிலே;
     காமுகர்க்கு அதிக சயம்
  ஓகைப் பொருளிலே;வரும் மருத்துவர்க்கோ சயம்
     கை விசேடந் தன்னிலே;
நலமுடைய வேசையர்க்கு அழகிலே! அரசர்க்கு
     நாளும் ரணசூரத்திலே
  நற்றவர்க்கு அதிக சயம் உலகு புகழ் பொறையிலே;
     ஞான வேதியர் தமக்கோ
குல மகிமை தன்னிலே; வைசியர்க்கோ சயம்
     கூடிய துலாக்கோலிலே;
  குற்றம் இல்லாத வேளாளருக்கோ சயம்
     குறையாத கொழு முனையிலே;
அலைவுஇல் குதிரைக்கு நடை வேகத்தில் அதிக சயம்
     ஆம் என்பர்; அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை