33.
வெற்றி இடம்
கலைவலாருக்கு அதிக
சயம் மதுரவாக்கிலே;
காமுகர்க்கு அதிக சயம்
ஓகைப் பொருளிலே;வரும் மருத்துவர்க்கோ சயம்
கை விசேடந் தன்னிலே;
நலமுடைய வேசையர்க்கு அழகிலே! அரசர்க்கு
நாளும் ரணசூரத்திலே
நற்றவர்க்கு அதிக சயம் உலகு புகழ் பொறையிலே;
ஞான வேதியர் தமக்கோ
குல மகிமை தன்னிலே; வைசியர்க்கோ சயம்
கூடிய துலாக்கோலிலே;
குற்றம் இல்லாத வேளாளருக்கோ சயம்
குறையாத கொழு முனையிலே;
அலைவுஇல் குதிரைக்கு நடை வேகத்தில் அதிக சயம்
ஆம் என்பர்; அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|