34. ஒன்றின் இல்லாமையான் பாழ்படல்

தாம்பூல தாரணம் இலாததே வரு பூர்ண
     சந்த்ரன் நிகர் முக சூனியம்!
  சற்சனர் இலாததே வெகுசனம் சேர்ந்து வாழ்
     தரும் பெரிய நகர் சூனியம்!
மேம்பாடு இலாத மன்னவர்கள் வந்து ஆள்வதே
     மிக்க தேசச் சூனியம்!
  மிக்க சற்புத்திரன் இலாததே நலமான
     வீறு சேர் கிருக சூனியம்!
சோம்பாத தலைவர் இல்லாததே வளமுடன்
     சொல் உயர் சபா சூனியம்!
  தொல் உலகில் அனைவர்க்கும் மா நிதியம் இல்லதே
     சுத்த சூனியம் என்பர் காண்!
ஆம்பல் வதனத்தனைக் குகனை ஈன்று அருள் செய்த
     அத்தனே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை