35. மூடர்களில் உயர்வு தாழ்வு

பெண் புத்தி கேட்கின்ற மூடரும், தந்தை தாய்
     பிழைபுறம் சொலும் மூடரும்,
  பெரியோர்கள் சபையிலே முகடேறி வந்தது
     பிதற்றிடும் பெரு மூடரும்,
பண்புற்ற சுற்றம் சிரிக்கவே இழிவான
     பழி தொழில் செய்திடும் மூடரும்,
  பற்றற்ற பேர்க்கு முன் பிணை நின்று பின்பு போய்ப்
     பரிதவித்திடும் மூடரும்,
கண் கெட்ட மாடென்ன ஓடி இரவலர் மீது
     காய்ந்து வீழ்ந்திடும் மூடரும்,
  கற்று அறிவு இலாத முழு மூடருக்கு இவர் எலாம்
     கால் மூடர் அரை மூடர்காண்
அண்கற்ற நாவலர்க்கு ஆகவே தூது போம்
     ஐயனே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை