36.
இதற்கு இது வேண்டும்
தனக்கு வெகு புத்தி
உண்டாகினும் வேறொருவர்
தம் புத்தி கேட்க வேண்டும்;
தான் அதிக சூரனே ஆகினும் கூடவே
தள சேகரங்கள் வேண்டும்;
கனக்கின்ற வித்துவான் ஆகினும் தன்னினும்
கற்றோரை நத்த வேண்டும்;
காசினியை ஒரு குடையில் ஆண்டாலும் வாசலில்
கருத்துள்ள மந்த்ரி வேண்டும்;
தொனிக்கின்ற சங்கீத சாமர்த்தியன் ஆகினும்
சுதி கூட்ட ஒருவன் வேண்டும்;
சுடர் விளக்கு ஆயினும் நன்றாய் விளங்கிடத்
தூண்டு கோல் ஒன்று வேண்டும்;
அனல் கண்ணனே! படிக சங்கம் நிகர் வண்ணனே!
ஐயனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|