37.
வறுமையின் கொடுமை
மேலான சாதியில்
உதித்தாலும் அதில் என்ன?
வெகு வித்தை கற்றும் என்ன?
மிக்க அதி ரூபமொடு சற்குணம் இருந்து என்ன?
மிகுமானி ஆகில் என்ன?
பாலான மொழி உடையன் ஆய் என்ன? ஆசார
பரனாய் இருந்தும் என்ன?
பார் மீது வீரமொடு ஞானவான் ஆய்என்ன?
பாக்கியம் இலாத போது;
வாலாய மாய்ப் பெற்ற தாயும் சலித்திடுவள்!
வந்த சுற்றமும் இகழுமே!
மரியாதை இல்லாமல் அனைவரும் பேசுவார்!
மனைவியும் தூறு சொல்வாள்!
ஆலாலம் உண்ட கனி வாயனே! நேயனே!
அனகனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|