39. மறைவும்
வெளிப்படையும்
சென்மித்த வருடமும்,
உண்டான அத்தமும்,
தீது இல்கிரகச் சாரமும்,
தின்று வரும் அவுடதமும், மேலான தேசிகன்
செப்பிய மகா மந்த்ரமும்,
புன்மை அவமானமும், தானமும், பைம்பொன் அணி
புனையும் மடவார் கலவியும்,
புகழ் மேவும் மானமும், இவை ஒன்பதும் தமது
புந்திக்குளே வைப்பதே
தன்மம் என்று உரை செய்வர்; ஒன்னார் கருத்தையும்
தன் பிணியையும் பசியையும்,
தான் செய்த பாவமும், இவை எலாம் வேறொருவர்
தம் செவியில் வைப்பது இயல்பாம்!
அல்மருவு கண்டனே! மூன்று உலகும் ஈன்ற உமை
அன்பனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|