4. உடன் பிறப்பு

கூடப் பிறந்தவர்க்கு எய்து துயர் தமது துயர்
     கொள்சுகம் தம் சுகம் எனக்
  கொண்டுதாம் தேடுபொருள் அவர் தேடு பொருள்
     அவர்கொள் கோது இல்புகழ் தம் புகழெனத்,
தேடு உற்ற அவர் நிந்தை தம் நிந்தை தம் தவம்
     தீது இல்அவர் தவம் ஆம் எனச்
  சீவன் ஒன்று உடல் வேறு இவர்க்கு என்ன, ஐந்தலைச்
     சீறு அரவம் மணிவாய் தொறும்
கூடு உற்ற இரை எடுத்து ஓரு உடல் நிறைத்திடும்
     கொள்கைபோல் பிரிவு இன்றியே
  கூடிவாழ்பவர் தம்மையே சகோதரர் எனக்
     கூறுவதுவே தருமமாம்;
ஆடிச் சிவந்த செந்தாமரைப் பாதனே!
     அண்ணல் எமது அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை