40. வானவர்
கால அளவை
சதுர்யுகம் ஓர்
இரண்டாயிரம் பிற்படின்
சதுமுகன்கு ஒருதினம் அதாம்!
சாற்றும் இத் தினம் ஒன்றிலே இந்த்ர பட்டங்கள்
தாமும் ஈரேழ் சென்றிடும்!
மதிமலியும் இத்தொகையின் அயன் ஆயுள் நூறு போய்
மாண்ட போது ஒரு கற்பம்ஆம்!
மாறிவரு கற்பம் ஒரு கோடி சென்றால் நெடிய
மால் தனக்கோர் தினம் அதாம்!
துதி பரவும் இத்தொகையில் ஒருகோடி நெடியமால்
தோன்றியே போய் மறைந்தால்
தோகையோர் பாகனே! நீநகைத்து அணிமுடி
துளக்கிடும் காலம் என்பர்!
அதிகம் உள பல தேவர் தேவனே! தேவர்கட்கு
அரசனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|