41. தூய்மை

வாம் பரிதனக்கு அதிக புனிதம் முகம் அதனிலே;
     மறையவர்க்கு உயர் புனிதமோ
  மலர் அடியிலே; புனிதம் ஒளிகொள் கண்ணாடிக்கு
     மாசில் முன்புறம் அதனிலே;
மேம்படும் பசுவினுக்குப் பின்புறத்திலே;
     மிக்க மட மாதருக்கோ
  மேனி எல்லாம் புனிதம் ஆகும்; ஆசௌசமொடு
     மேவு வனிதையர் தமக்கும்
தாம்பிரம் அதற்கும் மிகு வெள்ளி வெண்கலம் அயம்
     தங்கம் ஈயம் தமக்கும்
  தரும் புனிதம் வரு பெருக கொடு புளி சுணம் சாம்பல்
     சாரும் மண் தாது சாணம்
ஆம்புனிதம் இவை என்பர்; மாமேரு வில்லியே!
     அனகனே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை