41. தூய்மை
வாம் பரிதனக்கு
அதிக புனிதம் முகம் அதனிலே;
மறையவர்க்கு உயர் புனிதமோ
மலர் அடியிலே; புனிதம் ஒளிகொள் கண்ணாடிக்கு
மாசில் முன்புறம் அதனிலே;
மேம்படும் பசுவினுக்குப் பின்புறத்திலே;
மிக்க மட மாதருக்கோ
மேனி எல்லாம் புனிதம் ஆகும்; ஆசௌசமொடு
மேவு வனிதையர் தமக்கும்
தாம்பிரம் அதற்கும் மிகு வெள்ளி வெண்கலம் அயம்
தங்கம் ஈயம் தமக்கும்
தரும் புனிதம் வரு பெருக கொடு புளி சுணம் சாம்பல்
சாரும் மண் தாது சாணம்
ஆம்புனிதம் இவை என்பர்; மாமேரு வில்லியே!
அனகனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|