42. அடங்காதவற்றை அடக்குவதற்கு வழி

கொடிய பொலிஎருதை இரு மூக்கிலும் கயிறு ஒன்று
     கோத்து வசவிர்த்தி கொள்வார்;
  குவலயந்தனின் மதக் களிறு அதனை அங்குசம்
     கொண்டு வசவிர்த்தி கொள்வார்;
படியில் விட அரவை மந்திர தந்திரத்தினால்
     பற்றி வசவிர்த்தி கொள்வார்;
  பாய் பரியை நெடிய கடிவாளம் அது கொடு நடை
     பழக்கி வசவிர்த்தி கொள்வார்;
விடம் உடைய துட்டரைச் சோர்பந்து கைக்கொண்டு
     வீசி வசவீர்த்தி கொள்வார்;
  மிக்க பெரியோர்களும் கோபத்தை அறிவால்
     விலக்கி வசவிர்த்தி கொள்வார்;
அடியவர் துதிக்க வரு செந்தாமரைப் பதத்து
     ஜயனே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை