42.
அடங்காதவற்றை அடக்குவதற்கு வழி
கொடிய பொலிஎருதை
இரு மூக்கிலும் கயிறு ஒன்று
கோத்து வசவிர்த்தி கொள்வார்;
குவலயந்தனின் மதக் களிறு அதனை அங்குசம்
கொண்டு வசவிர்த்தி கொள்வார்;
படியில் விட அரவை மந்திர தந்திரத்தினால்
பற்றி வசவிர்த்தி கொள்வார்;
பாய் பரியை நெடிய கடிவாளம் அது கொடு நடை
பழக்கி வசவிர்த்தி கொள்வார்;
விடம் உடைய துட்டரைச் சோர்பந்து கைக்கொண்டு
வீசி வசவீர்த்தி கொள்வார்;
மிக்க பெரியோர்களும் கோபத்தை அறிவால்
விலக்கி வசவிர்த்தி கொள்வார்;
அடியவர் துதிக்க வரு செந்தாமரைப் பதத்து
ஜயனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|