43. ஒளியின் உயர்வு

செழுமணிக்கு ஒளி அதன் மட்டிலே! அதனினும்
     செய்ய கச்சோதம் எனவே
  செப்பிடும் கிருமிக்கு மிச்சம் ஒளி! அதனினும்
     தீபத்தின் ஒளி அதிகமாம்!
பழுதிலாத் தீவர்த்தி தீபத்தின் அதிகமாம்!
     பகல்வர்த்தி அதில் அதிகமாம்!
  பார மத்தாப்பின் ஒளி அதில் அதிகமாம்! அதிலும்
     பனி மதிக்கு ஒளி அதிகம்ஆம்!
விழைதரு பரிதிக்கும் மனு நீதி மன்னர்க்கும்
     வீர விதரணிகருக்கும்
  மிக்க ஒளி திசைதொறும் போய் விளங்கிடும் என்ன
     விரகுளோர் உரை செய்குவார்!
அழல் விழிகொடு எரி செய்து மதனவேள் தனை வென்ற
     அண்ணலே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை