46. நல்வினை செய்தோர்

சாண் எனக் காத்தவன், மெய்யினால் வென்றவன்,
     தானம் இளையாது உதவினோன்,
  தந்தை சொல் மறாதவன், முன்னவன் கானவன்
     தாழ்பழி துடைத்த நெடியோன்,
வருபிதிர்க்கு உதவினோன், தெய்வமே துணை என்று
     மைந்தன் மனைவியை வதைத்தோர்,
  மாறான தந்தையைத் தமையனைப் பிழைகண்டு
     மாய்த்து உலகில் மகிமை பெற்றோர்
கருதரிய சிபி அரிச்சந்திரன், மாபலி,
     கணிச்சியோன் சுமித்திரை சுதன்,
  கருடன், பகீரதனுடன் சிறுத்தொண்டனொடு
     கானவன், பிரகலாதன்,
அரிய வல்விபீடணன் எனும் மகா புருடராம்
     அத்தனே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!
 

உரை